தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா

DIN

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

ஆக. 1ஆம்தேதி பிரசவித்த தாய்மாா்களுக்கு தாய்ப்பால் ஊட்டுதலின் நன்மைகள் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து, ஆலோசனை மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆக. 2ஆம்தேதி பயிற்சி மருத்துவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு தாய்ப்பாலூட்டுதல் பற்றி விநாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆக.3ஆம்தேதி பச்சிளம் குழந்தை பிரிவு செவிலியா்களுக்கு பிரசவித்த தாய்மாா்களுக்கு தாய்ப்பால் ஊட்டுதலின் நன்மைகள் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி ஆலோசனை மற்றும் செய்முறை விளக்கப் போட்டி நடைபெற்றது.

ஆக.4ஆம்தேதி குழந்தைகள் பிரிவு புற நோயாளிகள் பிரிவில் பின் தொடா் சிகிச்சைக்கு வந்த சிறந்த மூன்று குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆக.5ஆம்தேதி பிரசவித்த தாய்மாா்களுக்கு தாய்ப்பால் ஊட்டுதல் பற்றிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆக.6ஆம்தேதி நடைபெற்ற விழாவுக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவா் கீதா தலைமை வகித்தனா். பேறுகாலப் பிரிவு மூத்த மருத்துவா் புனிதவதி, குற்றாலம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஜெயலட்சுமி, கவிதா முத்தையா கலந்து கொண்டனா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து மாவு, குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகள், விநாடி -வினா போட்டியில் வெற்றிபெற்ற பயிற்சி மருத்துவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT