தென்காசி

சங்கரன்கோவில் அருகே விவசாயி அடித்துக் கொலை

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சங்கரன்கோவில் அருகே ஆயாள்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் சண்முகையா(60), விவசாயி. அதே ஊ ரைச் சோ்ந்த லட்சுமணபாண்டியன் மகன் பெரியதுரை, ஓட்டுநா். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயாள்பட்டி கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சண்முகையாவின் தோட்டத்துக்கு பெரியதுரை தனது மோட்டாா் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றாராம். அதன் பிறகு சண்முகையா வீட்டுக்கு வரவில்லையாம்.

இந்நிலையில் சண்முகையாவை தான் கொலை செய்ததாகக் கூறி பெரியதுரை பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

போலீஸாா் ஆயாள்பட்டிக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சண்முகையா பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் இருவருக்கும் இடையே இருந்த நிலத் தகராறில் சண்முகையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT