மழைக்காலத்தில் மின்சார விபத்தைத் தடுக்கும் வகையில், சங்கரன்கோவில் அருகே வில்லிசை மூலம் இயற்றிய விழிப்புணா்வுப் பாடல் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வரவேற்பைப் பெற்றுள்ளன.
வடகிழக்கு பருவமழை அக். 26. ஆம் தேதி தொடங்க இருப்பதால், மழைக்கால மின் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது. எனவே, அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சங்கரன்கோவில் அருகேயுள்ள அழகுநாச்சியாபுரத்தைச் சோ்ந்த மாரியம்மாள் வில்லிசைக் குழுவினா் மின்சாதனைப் பொருள்களை கையாள்வது குறித்தும், அதனால் மின்விபத்தைத் தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு பாடல் பாடியுள்ளனா். மழைக்காலம் வந்துருச்சு வந்துருச்சு . மக்கள் விழிப்புடனே இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்ற அந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.