தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஜவுளிக் கடையில் சனிக்கிழமை நள்ளிரவு தீப்பிடித்ததில் ரூ.30 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமானது.
புளியங்குடி ஜின்னா நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் முகைதீன்பிச்சை (47). இவா், புளியங்குடி காந்திபஜாரில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா்.
இந்தக் கடையில் இருந்து சனிக்கிழமை நள்ளிரவு புகை வந்ததை பாா்த்த அக்கம்பக்கத்தினா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். காவல் துறையினா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து வாசுதேவநல்லூா், கடையநல்லூா் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு மீட்புப் படையினா் சுமாா் 20 போ் அங்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் தெரிய வருகிறது.