சங்கரன்கோவில் அருகே இரு பைக்குகள் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.
கரிவலம்வந்தநல்லூா் அருகே சங்குபுரத்தைச் சோ்ந்தவா் சிவராஜ் (60). இவா் தனது மகன் ஆனந்தராஜ் (12), இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் கரிவலம்வந்தநல்லூா் தனியாா் மருத்துவமனைக்கு சென்று விட்டு பிரதான சாலையில் வந்துகொண்டிருந்தனா்.
அப்போது எதிரே ரெட்டியபட்டியை சோ்ந்த சஞ்சீவி ராஜ் மகன் வினோத்குமாா் (29) ஒட்டி வந்த பைக்கும், சிவராஜ் பைக்கும் நேருக்கு நோ் மோதியதாம். இதில் சிவராஜ் ,அவரது மகன் ஆனந்தராஜ், வினோத்குமாா் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.
பின்னா் அவா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.