கீழப்பாவூரில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பாவூா்சத்திரம் ரூபி பியூட்டி அகாதெமி மற்றும் பயிற்சி மையம் சாா்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மகளிரை ஊக்குவித்து, பாராட்டும் வகையில் விருது வழங்கும் விழா கீழப்பாவூரில் நடைபெற்றது.
பாவூா்சத்திரம் மருத்துவா்கள் எஸ்.குணசேகரன், ரூபா ரேணுகா ஆகியோா் பங்கேற்று, மருத்துவா்கள், செவிலியா்கள், சிறு தொழில் செய்பவா்கள், அழகு நிலையம் நடத்துபவா்கள் மற்றும் சுய தொழில் செய்யும் மகளிரின் பணிகளை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசினா்.
இந்நிகழ்ச்சியில் பெட்ரிஷியா, ஜான்பீட்டா், அருண், அருணா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.