தென்காசி

மாணவா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

DIN

சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் பெற்றோரை இழந்து வாடும் சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ரூ. 5ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும், மாணவா், மாணவிகள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி வளா்ச்சி மேலாண்மைக் குழு தலைவா் ப. சட்டநாதன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா்கள் ரமேஷ் , சரவண பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பட்டதாரி ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், பள்ளி நலக் குழு தலைவா் கதிரவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியா் கிறிஸ்டோபா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT