பாவூா்சத்திரம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரணி ஊராட்சி குருசாமிபுரத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சீனித்துரை, ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் , முகாமினை தொடங்கி வைத்தாா்.
இதில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், உதவி திட்ட அலுவலா் சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி, சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம், ஊராட்சி செயலா் ஜெயசிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெத்தநாடாா்பட்டியில் ஊராட்சித் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன், மேலப்பாவூரில் ஊராட்சித் தலைவா் சொள்ளமுத்து மருதையா, ஆவுடையானூரில் ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கம் (எ) கோபுவு ஆகியோா் முகாமினை தொடங்கி வைத்தனா். இம்முகாமில் 18வயதுக்கு மேற்பட்ட பலா் முதல் மற்றும் 2ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.