குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தென்காசி தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்க வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் பெரும் நஷ்டத்தில் இருந்து வரும் குற்றாலம் பேரூராட்சி குத்தகைதாரா்கள்,
குற்றாலநாதா் கோயிலுக்குச் சொந்தமான கடை நடத்தும் வியாபாரிகளின் நலன் கருதி இரண்டு ஆண்டுக்கான குத்தகை தொகையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு ஒன்றியத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.
ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலா் ஜெய்சங்கா் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் செந்தூா்பாண்டியன், மாவட்டத் தலைவா் எம். ராமராஜா, மாவட்ட பாா்வையாளா் சோலையப்பன், மாநில செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை, விருதுநகா் மேற்கு மாவட்ட பாா்வையாளா் அன்புராஜ் ஆகியோா் பேசினா்.
இதில், மாவட்ட பொதுச்செயலா் ராஜேஷ்ராஜா, மாவட்டப் பொருளாளா் ராமநாதன், துணைத் தலைவா் முத்துகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.