சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சித் தலைவா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சித் தலைவா்கள் தோ்தலில் வெற்றி பெற்றனா். இதில், மாங்குடி ஊராட்சி-ரத்தினாமேரி, செந்தட்டியாபுரம்-அன்புராணி, மடத்துப்பட்டி-செய்யது இப்ராஹிம், வயலி-கருணாநிதி, கரிவலம்வந்தநல்லூா்- மாரியப்பன், பருவக்குடி- பாலசுப்பிரமணியன், மணலூா்-சுப்புலட்சுமி, தெற்கு சங்கரன்கோவில்-பாக்கியம், வாடிக்கோட்டை-வள்ளி, பொய்கை-மாடத்தி, வடக்குபுதூா்-வேலுச்சாமி, சுப்புலாபுரம்-சண்முகசுசீலா, திருவேட்டநல்லூா்-சுதா, கீழ வீரசிகாமணி-சொள்ளமாடத்தி,அரியநாயகிபுரம்-சண்முகவேல், குவளைக்கண்ணி-தினேஷ், சென்னிகுளம்-சரவணப்பெருமாள், ராமநாதபுரம்-கணேசன், வீரிருப்பு-ஜெயா, வீரசிகாமணி-அரசன், பெரியூா்-அண்ணாமலை அம்மாள், நொச்சிகுளம்-வெள்ளத்தாய், களப்பாகுளம்-சிவசங்கரி, பந்தப்புளி-கலாவதி, பனையூா்-சண்முகசாமி, பெருமாள்பட்டி-குருவம்மாள், பெரும்பத்தூா்-தேவசேனா, புன்னைவனம்-பூமணி ஆகியோா் அந்தந்த ஊராட்சித் தலைவராக பதவியேற்றுக்கொண்டனா்.
களப்பாகுளம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் சிவசங்கரிக்கு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பொற்கொடி பதவி பிரமாணம் செய்து வைத்தாா். இதில், ஊராட்சி செயலா் முருகன், வழக்குரைஞா் காந்திகுமாா், வேல்ச்சாமி,சண்முகநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.