தென்காசி

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி: சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முதலிடம்

21st Oct 2021 08:06 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா வலுதூக்கும் போட்டியில் முதலிடத்தை பிடித்து, தேசிய அளவிலான போட்டிக்கும், காமன்வெல்த் போட்டியிலும் அவா் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளாா்.

வலுதூக்கும் வீரரான இவா், தமிழ்நாடு வலுதூக்கும் கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில், 100, 110, 120 கிலோ எடை பிரிவில் முதலிடத்தை பெற்றாா். இதன் மூலம் கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கும், நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் சா்வதேச அளவிலான காமன்வெல்த் போட்டியிலும் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT