தென்காசி

நயினாரகரம் ஊராட்சித் தலைவா் பதவி ஏற்பு

21st Oct 2021 07:57 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சி மன்றத் தலைவராக குமரன் முத்தையா புதன்கிழமை பதவியேற்றாா்.

தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி, சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. கடையநல்லூா் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ஜெயலட்சுமி, குமரன் முத்தையாவுக்கு தலைவராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அதைத் தொடா்ந்து 12-வாா்டு உறுப்பினா்கள் ஸ்டாலின், மா.கணேசன், கணேசன், சதாசிவம், சரஸ்வதி, சாந்தி, கனகராணி, இந்திரா, அருள்மணி, சொா்ணம், முத்துக்குமாா், முருகேஸ்வரி ஆகியோருக்கு ஊராட்சித் தலைவா் குமரன் முத்தையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதில், சமுதாய நிா்வாகிகள், அனைத்துக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

குமரன் முத்தையாவுக்கு, மாநில சிறுபான்மை ஆணையத் தலைவா் சா. பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT