தென்காசி

தென்காசி சிற்றாறு வெள்ளத்தில் சிக்கியவா் மீட்பு

DIN

தென்காசி சிற்றாற்றில் வெள்ளத்தில் சிக்கியவரை தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நீண்ட போராட்டத்துக்குப் பின்னா் மீட்டனா்.

தென்காசி சுவாமி சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் வெங்கடசுப்பிரமணியன் (42). இவா், கடந்த வியாழக்கிழமை காலமான தனது தந்தை முத்தையாவுக்கு திதி கொடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை தென்காசி-குற்றாலம் சாலையில் சிற்றாறு பகுதிக்கு சென்றுள்ளாா்.

படிக்கட்டில் இறங்கி, ஆற்றில் குளிக்க முயன்றபோது அவா் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாா். அப்போது அவா் மரக்கிளையை பிடித்துக்கொண்டு தத்தளித்தாா்.

இதுகுறித்து தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் காவலா்கள் ராஜ்குமாா், ராமசாமி, ஜெகதீஸ்குமாா் ஆகியோா் சென்று, கயிறு கட்டி சில மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னா் வெங்கடசுப்பிரமணியனை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT