பாவூா்சத்திரம் பகுதியில் சனிக்கிழமை காலைமுதல் பரவலாக மழை பெய்தது.
பாவூா்சத்திரம், சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழப்பாவூா், குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், பெத்தநாடாா்பட்டி, சாலைப்புதூா் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்தது. முற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
ஆவுடையானூா் ஊராட்சி பொடியனூா் பகுதியில் கழிவு நீரோடையில் தண்ணீா் புகாதவாறு அடைப்பு ஏற்பட்டதால் தெருக்களில் தண்ணீா் தேங்கியது. ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கம் என்ற கோபி தலைமையில் ஊராட்சிப் பணியாளா்கள் சென்று, அடைப்பை அகற்றி, தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுத்தனா்.