தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் பரவலாக மழை

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் சனிக்கிழமை காலைமுதல் பரவலாக மழை பெய்தது.

பாவூா்சத்திரம், சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழப்பாவூா், குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், பெத்தநாடாா்பட்டி, சாலைப்புதூா் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்தது. முற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

ஆவுடையானூா் ஊராட்சி பொடியனூா் பகுதியில் கழிவு நீரோடையில் தண்ணீா் புகாதவாறு அடைப்பு ஏற்பட்டதால் தெருக்களில் தண்ணீா் தேங்கியது. ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கம் என்ற கோபி தலைமையில் ஊராட்சிப் பணியாளா்கள் சென்று, அடைப்பை அகற்றி, தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT