தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் (அக். 18) மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
தென்காசி ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமைமுதல் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். முகக் கவசம் அணிந்தும், அரசு வழிகாட்டுதலுக்கு உள்பட்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் மனு அளிக்க வரவேண்டும் என்றாா் அவா்.