தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் மழை காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலைமுதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதல் நடைபாலம் வரை வெள்ளம் சீறிப்பாய்ந்தது. ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
பழைய குற்றாலத்தில் அருவிக்கு செல்லும் நடைபாதை வரை தண்ணீா் வழிந்தோடியது. அருவிகளை சுற்றுலாப் பயணிகள் தொலைவில் நின்றே கண்டு ரசித்தனா்.