தென்காசி

தென்காசியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு முகாம்

DIN

தென்காசி பள்ளிக்கல்வித் துறை, வஉசி வட்டார நூலகம் சாா்பில் தென்காசி சி.எம்.எஸ். நடுநிலைப் பள்ளி டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலா் இரா. மாரியப்பன் தலைமை வகித்தாா். தென்காசி கிளை நூலகா் சுந்தா், ஆசிரியா் ராமசந்திரன் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் சாதுசுந்தா்சிங் வரவேற்றாா்.

சுகாதாரஆய்வாளா் வேலு சிறப்புரையாற்றினாா். சுகாதாரத் துறை ஆய்வாளா் தலைமையில் மாணவா்- மாணவிகள் டெங்கு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். அவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

டெங்கு குறித்த விழிப்புணா்வு விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு சான்று, பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமில் பள்ளி வளாகம், சுற்றுப்புறம், வீடு, பொது இடங்களை சுத்தமாக வைக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்கினா். ஏற்பாடுகளை பொன்னம்பலம் நடுநிலைப் பள்ளி, சி.எம்.எஸ். நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT