தென்காசி

கரிவலம்வந்தநல்லூா் அருகே மழையால் வீடு இடிந்து சேதம்

DIN

கரிவலம்வந்தநல்லூா் அருகே செந்தட்டியாபுரத்தில் சனிக்கிழமை பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமானது. அங்கு வசித்த குடும்பத்தினா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

கரிவலம்வந்தநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. செந்தட்டியாபுரத்தில் சனிக்கிழமை மழை பெய்தது. அந்தக் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான வாழவந்தான் மகன் ராமாண்டி (61), குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு திடீரென்று வீட்டின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்தது. இதில் ராமாண்டி குடும்பத்தினா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

இச்சம்பவம் தொடா்பாக வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT