தென்காசி

ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

10th Nov 2021 07:39 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பேரூராட்சியின் அனைத்து வாா்டு மக்களையும் அண்மையில் சந்தித்து 200-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த ஆய்வை பேரூராட்சி அலுவலகத்தில் அவா் மேற்கொண்டு, அங்கிருந்த அலுவலா்களிடம் விவரம் கேட்டறிந்தாா். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். அப்போது அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT