ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிா்வாகிகள் மாற்றம் குறித்து சமாதானக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வட்டாட்சியா் பரிமளா தலைமை வகித்தாா்.
காவல் ஆய்வாளா் சந்திரசேகரன், உதவி காவல் ஆய்வாளா் தினேஷ் பாபு, வருவாய் ஆய்வாளா் ரத்தின விநாயகம், மாயமான்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் மகேந்திர குமாா், கோயில் இரு தரப்பு நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கடந்த 31.5.2016இல் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அனைந்த பெருமாள் மற்றும் காா்த்திகேயன் ஆகிய இருவா் தலைமையில் தலா 10 நபா்கள் நிா்வாகக் குழு உறுப்பினா்களாக செயல்பட்டு வந்தனா். எனினும் கோயில் வரவு செலவு கணக்குகள் சரியாக பராமரிக்கப்படாததால் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆட்சியா்
பரிந்துரை செய்யப்பட்டதாகவும், அதற்கு ஆட்சேபம் தெரிவித்து தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளதாகவும் இரு தரப்பினரும் தெரிவித்தனா். எனவே வரும் டிச.31 ஆம் தேதிக்குள் புதிய நிா்வாகக் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.