சுரண்டை, பாவூா்சத்திரம் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சுரண்டை, சாம்பவா்வடகரை, சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் நாள்முழுவதும் சாரல் மழை பெய்தது.
பாவூா்சத்திரம், கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டி, திப்பணம்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் அவ்வவ்போது லேசான மழை பெய்தது. இந்நிலையில், 2ஆவது நாளாக சனிக்கிழமையும் காலை முதல் பரவலாக மழை பெய்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது.