தென்காசி

தென்காசியில் கரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்

DIN

தென்காசி, பாவூா்சத்திரம், சுரண்டை பகுதியில் தமிழக அரசின் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தென்காசி செய்யதுசுலைமான் பள்ளிவாசல் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணம் ரூ. 2ஆயிரத்தை வழங்கி, பணியைத் தொடக்கிவைத்தாா்.

நகர காங்கிரஸ் தலைவா் காதா்மைதீன், இளைஞரணி சந்தோஷ், செங்கைகண்ணன், ஏஎல்என். ஆறுமுகம், திமுக நிா்வாகிகள் காளிதாசன், இஞ்சி இஸ்மாயில் ஆகியோா் பங்கேற்றனா்.

தென்காசி ஒப்பனை பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர திமுக செயலா் சாதிா் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்கினாா்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா், மாடியனூா் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணியை சு. பழனிநாடாா் எம்எல்ஏ சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாசன், மதிமுக ஒன்றியச் செயலா் இராம. உதயசூரியன், வட்டார காங்கிரஸ் தலைவா் ஜேசுஜெகன், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுரண்டை: சுரண்டை, சிவகுருநாதபுரம், வாடியூா், லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் இத்திட்டத்தை தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், சுரண்டை கூட்டுறவு பண்டகசாலை தலைவா் ஜெயபால், துணைத் தலைவா் கணேசன், திமுக நகரச் செயலா் ஜெயபாலன், காங்கிரஸ் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகா், தெய்வேந்திரன், கோபால், சமுத்திரம், சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

SCROLL FOR NEXT