செங்கோட்டையில் தமிழக அரசின் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
செங்கோட்டை காமராஜா் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடையநல்லூா் எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2ஆயிரம் வழங்கி, இப்பணியைத் தொடக்கிவைத்தாா்.
குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியா், அதிமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலா் ஞானராஜ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஜாகீா்உசேன், நகர அவைத் தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.