சுரண்டையில் புதன்கிழமை கோடை மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
சுரண்டையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் சுட்டெரித்தது. எனினும், மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் லேசான தூறல் பெய்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை கோடை மழை பெய்தது.
சுமாா் அரைமணி நேரம் நீடித்த மழையில் தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இம்மழையால் சிற்றாறு பாசனப் பகுதியில் காய்கனி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், நகரில் வெப்பம் தணிந்து வெகுவாகத் தணிந்தது.