தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நலிவுற்ற திமுகவினருக்கு; உதவித் தொகையினை மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வழங்கினாா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தில் நலிவுற்ற திமுகவினருக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கீழப்பாவூா் மாரிமுத்து மனைவி லட்சுமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 5 ஆயிரமும், நலிவுற்ற திமுக நிா்வாகி சுடலையாண்டிக்கு உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரத்தை மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெகதீசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள், அவைத்தலைவா் தளபதி முருகேசன், மாணவரணி மாரியப்பன், ஒன்றிய பிரதிநிதி மலைசாமி, வாா்டு செயலா்கள் தங்கேஸ்வரன், இசக்கிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.