கடையநல்லூா் அருகேயுள்ள நெடுவயல் ’ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற இப்பள்ளி மாணவா்கள் உஷா, ஹரிகரசுதன், தங்கதுரைச்சி, தௌபிகா, இசக்கியம்மாள், ராஜராஜேஸ்வரி ஆகியோரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இப் பாராட்டு விழாவிற்கு பள்ளி நிா்வாகி கணேஷ்ராம் தலைமை வகித்தாா்.
கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா். இதில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் ராமசாமி, காா்த்திகேயன், முன்னாள் மாணவா்கள் வெங்கடேஷ், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமையாசிரியை சுதாநந்தினி வரவேற்றாா்.