கடையநல்லூரில் நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள், கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பது ஆகியவை குறித்து, மக்கள் கூடும் இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் தொடங்கிவைத்தாா். ஏற்பாடுகளை சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா் ,மாரிச்சாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.