சுரண்டையில் செவ்வாய்க்கிழமை சீரான குடிநீா் விநியோகம் கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
சுரண்டை பேரூராட்சிக்குட்பட்ட 6ஆவது வாா்டில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லையாம். இதனால் பொதுமக்கள் குடிநீா் லாரி மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.