சுரண்டையில் 20 பவுன் நகை திருட்டுப்போன வழக்கில், நகை திருடிய உறவுக்கார பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கீழச்சுரண்டையில் கடந்த சனிக்கிழமை ஜெ.அம்சுராணி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை திருட்டுப்போனதாம். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் வீட்டுக்கு வந்து சென்றவா்கள் விவரம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அதே பகுதியைச் சோ்ந்த அம்சுராணியின் உறவுக்கார பெண்ணான அ.செல்வஜீவா(38) நகை திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 20 பவுன் நகையை மீட்டனா்.