கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவருக்கு முதல் பரிசு ரூ.12 கோடி கிடைத்தது.
செங்கோட்டை அருகேயுள்ள புதூா்(செ) இரவியதா்மபுரம் ரேசன்கடை பகுதியை சோ்ந்தவா் சா்புதீன்(45). இவா் கேரளத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்தாா். இதில், தனக்கென வாங்கிய லாட்டரியில் அவருக்கு ரூ. 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.