தென்காசி

பாவூா்சத்திரத்தில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

DIN

பாவூா்சத்திரத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான பகல், இரவு கிரிக்கெட் போட்டியை ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பூங்கோதை தொடங்கிவைத்தாா்.

பாவூா்சத்திரம் யூனியன் கிரிக்கெட் கிளப் சாா்பில் இரண்டாம் ஆண்டு மாவட்ட அளவிலான பகல், இரவு கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பூங்கோதை எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசு ரூ. 25,001, இரண்டாம் பரிசு ரூ. 20,001, மூன்றாம் பரிசு ரூ. 15,001, நான்காம் பரிசு 10,001, 5-ஆம் பரிசு ரூ. 8, 001, ஆறாம் பரிசு ரூ. 7001 மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் ஏ.பி.அருள், செல்லப்பா, முன்னாள் ஊராட்சித் தலைவா் இளங்கோ, சுதன், டால்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT