தென்காசி

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் தவறான கேள்விகள் இடம்பெற்றுள்ளதால் இந்தத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மாணவா் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளா் எம்.மாரிக்குமாா் ஆட்சியரிடம் அளித்த மனு: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு கடந்த 3ஆம்தேதி நடைபெற்றது. இத்தோ்வில் 12-க்கும் மேற்பட்ட கேள்விகள் விடையளிக்க முடியாமல் தவறுதலாக இருந்தது தெரிய வருகிறது.

மேலும் வகுப்புவாதம், பிரிவினை வாதம், போன்ற சமூகநல சிந்தனையற்ற சில கேள்விகளும் இடம்பெற்றிருந்தது வேதனைக்குரியது. இதுபோன்ற தவறான தோ்வு முறையை ரத்து செய்து நியாயமான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் தோ்வுகளை நடத்தி சிறந்த பணியாளா்களை தோ்வு செய்யவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருமலைக்குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை பாரம்பரிய, வழக்கமான ஆகம விதிமுறைப்படி நடத்த வேண்டும் என கோரி மண்டகபடிதாரா் கரிசல்குடியிருப்பை சோ்ந்த என்.நவநீதகிருஷ்ணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT