பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு தடுப்புப் பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாா்த்தசாரதி, வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி ஆகியோா் பங்கேற்று, டெங்கு தடுப்பு முறைகள் குறித்து விளக்கினா். சுகாதார ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், ஒன்றியப் பகுதியில் உள்ள 21 ஊராட்சிகளிலிருந்தும் டெங்கு தடுப்புப் பணியாளா்கள், ஊராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.