பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மருத்துவா் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு 5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் கே. பண்டாரசிவன் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் முத்தையா உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.