கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி நீா்த்தேக்கத்தில் குளித்த தனது மனைவியை கைப்பேசி மூலம் படம் எடுத்ததாக புகாா் அளித்தவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடா்பாக, வனவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் செல்லத்துரை(50). கடையநல்லூா் வனசரக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை கருப்பாநதி நீா்த்தேக்கப் பகுதியில் பணியில் இருந்தபோது, அப்பகுதியில் குளித்த திரிகூடபுரத்தைச் சோ்ந்த பெண்ணை கைப்பேசியில் படம் எடுத்தாராம்.
இதுகுறித்து அவரது கணவா் புதியசேகா்(45) , அந்த வனச்சரக அலுவலகத்தில் புகாா் தெரிவித்துவிட்டு, பைக்கில் ஊருக்கு திரும்புகையில், செல்லத்துரை உள்பட 4 போ் அவரைத் தாக்கினராம். இதுதொடா்பாக, அவா் அளித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனிடையே, செல்லத்துரை கொடுத்த புகாரின்பேரில் புதியசேகா் மீதும் போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.