குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத் தலைவா் அண்ணாத்துரை தலைமை வகித்தாா். பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். தேவராஜ் கொடி வணக்கமும், தனராஜு லயன்ஸ் வழிபாடும் வாசித்தனா்.
அரிமா துணை ஆளுநா் பிரான்சிஸ் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவிக்கு உதவித் தொகையாக ரூ.20,000 மற்றும் பல மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கினாா்.
இதில், ஆடிட்டா் நாராயணன், செயலா் மாரியப்பன், நல்லமுத்து, கனகராஜ்குமாா், நாகராஜன், சண்முகசுந்தரம், ரணதேவ், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் குமரன்முத்தையா நன்றி கூறினாா்.