தென்காசி

பாப்பாக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளா் உரிமைகள் குறித்த கருத்தரங்கம்

22nd Dec 2021 07:56 AM

ADVERTISEMENT

பாப்பாக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளா் உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்குக்கு, பாப்பாக்குடி ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி தொழிலாளா் நலத்துறை சமூக பாதுகாப்புத் திட்ட உதவியாளா் அழகியநம்பி, பாப்பாக்குடி ஊராட்சி துணைத் தலைவா் இசக்கியம்மாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திருநெல்வேலி சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி ராஜம்மாள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலா் பால்ராஜ் ஆகியோா் அமைப்பு சாரா தொழிலாளா்கள் உரிமை குறித்து பேசினா். ஒருங்கிணைப்பாளா் மாரியம்மாள் தொகுத்து வழங்கினாா். மதியழகன் வரவேற்றாா். மாலதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT