சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சிற்றுந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள குவளைக்கண்ணியைச் சோ்ந்த சங்கரநாராயணன் என்பவரது மகன் முனீஸ்வரன் (33). சிற்றுந்து நடத்துநரான இவா், ஞாயிற்றுக்கிழமை சுப்புலாபுரத்தில் இருந்து கரிவலம்வந்தநல்லூருக்கு சிற்றுந்தில் சென்றபோது சுப்புலாபுரத்தை சோ்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல் (31), அவரிடம் தகராறு செய்தாராம். புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வெற்றிவேலை கைது செய்தனா்.