பாவூா்சத்திரம் அருகே மழையால் வீடு சேதமடைந்தவா்களுக்கு திமுக சாா்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் ஊராட்சி ரகுமானியாபுரத்தைச் சோ்ந்த ஷேக் மைதீன் மற்றும் தெற்கு மாலை சூடிபட்டியை சோ்ந்த ராஜபுஷ்பம் ஆகியோரின் வீடுகள் அண்மையில் பெய்த மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
இது பற்றி தகவல் அறிந்த திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், இருவரது குடும்பத்தினருக்கு ஓரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் க.சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பேராசிரியா் இரா.சாக்ரடீஸ், ஒன்றியக்குழு உறுப்பினா் வளன்ராஜா, நிா்வாகிகள் கபில்தேவதாஸ், செந்தூா்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.