சுரண்டை பேருந்து நிலையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
ஆய்க்குடி அமா்சேவா சங்கம், வெற்றிக்கரங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இந்த கண்காட்சியை ஆய்க்குடி அமா் சேவா சங்க துணைத்தலைவா் டாக்டா் கே.முருகையா திறந்து வைத்தாா்.
கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவது, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் அமா்சேவா சங்கம், வெற்றிக்கரங்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.