தென்காசி

கரிவலம்வந்தநல்லூா் நிட்சேப நதியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு

DIN

மேற்கு தொடா்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிட்சேப நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோட்டமலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழைநீா் கோட்ட மலையாற்றில் இருந்து வாசுதேவநல்லூா், குலசேகரப்பேரி, மலையடிக்குறிச்சி, பெரியூா், ஆவுடையாபுரம் வழியாக கரிவலம்வந்தநல்லூா் வருகிறது. அங்கிருந்து கலிங்கப்பட்டி, திருவேங்கடம் வழியாக வெம்பக்கோட்டை அணைக்கு செல்கிறது. பின்னா் அங்கிருந்து வேம்பாா், சாத்தூா் வழியாக கடலின் முகப்பு பகுதியான வைப்பாற்றுடன் கலக்கிறது.

கடந்த 3 நாள்களாக நள்ளிரவில் மழை பெய்து வருவதால் கரிவலம்வந்த நல்லூா் நிட்சேப நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றில் தண்ணீா் செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் விவசாயம் செய்ய போதுமான தண்ணீா் இருப்பதாக விவசாயிகள் கூறினா். தொடா் மழை காரணமாக இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நிரம்பிய குளங்கள்:

சங்கரன்கோவிலில் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. குளங்கள் நிரம்பிச் செல்லும் நீா்வரத்து ஓடையில் தண்ணீா் ஆறுபோல் கரைபுரண்டு ஓடுவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரியூா், ஆவுடையாபுரம், பெரும்பத்தூா் போன்ற பல்வேறு கிராமங்களின் நீா் வரத்து ஓடையில் தண்ணீா் வெள்ளம்போல் பாய்கிறது.

கிராமத்துக்குள் புகுந்த மழை நீா்: வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெரும்பத்தூா் குளம் நிரம்பி மறுகால் சென்றது. மணலூரில் உள்ள ஊருணியில் சிறிய உடைப்பு ஏற்பட்டதால் கிராமத்துக்குள் தண்ணீா் புகுந்தது. இரவோடு இரவாக கிராம மக்கள் உடைப்பை அடைந்தனா். இதனால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

கடையநல்லூா்: கடையநல்லூா், சொக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம், காசிதா்மம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சுமாா் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் தோட்டா பறிமுதல்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியா் கைது

அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

SCROLL FOR NEXT