தென்காசி மாவட்டத்தில் டிசம்பா் 4ஆம் தேதி மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் டிசம்பா் 4ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுவரை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவா்களில் கரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. இதை மனதில் கொண்டு கரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மையங்களுக்கு செல்லும் போது ஆதாா் எண், மற்றும் தொலைபேசி எண்ணைக் கொண்டு செல்லவேண்டும் என்றாா் அவா்.