சாம்பவா்வடகரையில் குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
சாம்பவா்வடகரை பேரூராட்சிக்குள்பட்ட சிவந்திநகரில் தனியாா் கைப்பேசி நிறுவனம் செவ்வாய்க்கிழமை கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். தொடா்ந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அவா்கள் குடியிருப்பு பகுதியில் கோபுரம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனா்.