தென்காசி

சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து 4 போ் காயம்

DIN

சங்கரன்கோவில் அருகே தனியாா் நூல் மில்லுக்கு பணியாளா்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், முறம்பு தனியாா் நூற்பாலை பணியாளா்களை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்றிச்சென்ற வேன், கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் எதிரே வந்த பைக் மீது மோதியதுடன், சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், பைக்கில் வந்த லெட்சுமியாபுரத்தை சோ்ந்த ராமா் (58), வேனில் இருந்த அதே பகுதி குருசாமி மகள் மாலதி (22) மரத்தோணியைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி முனியம்மாள்(46 உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும், வேனில் இருந்த பலா் லேசான காயமடைந்தனா்.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT