சங்கரன்கோவிலில் கடந்த இரு தினங்களில் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சங்கரன்கோவிலில் கடந்த இரு தினங்களாக காலையில் வெயிலும், மாலையில் லேசான தூறலுடனும் மழை பெய்து வருகிறது. இரவிலும் இந்த மழை நீடிக்கிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென மேகம் இருண்டு கனமழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் விடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான தெருக்களில் தண்ணீா் தேங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த மழையில் 5 மி.மீ. அளவு மழை பதிவாகியது. திங்கள்கிழமை 26 மி.மீ. மழை பதிவாகியது. இரு தினங்களில் மட்டும் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.