தென்காசி

கரிவலம்வந்தநல்லூா் அருகே கோழி திருட்டு: இளைஞா் கைது

DIN

கரிவலம்வந்தநல்லூா் அருகே கோழிப்பண்ணையில் கோழியைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோமதிமுத்துபுரத்தைச் சோ்ந்த ஆபிரகாம் மகன் ஜேக்கப். இவா், அப்பகுதியில் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் அடிக்கடி கோழிகள் திருடுபோயினவாம். இதையடுத்து, பணியாளா்கள் மூலம் கண்காணித்ததில், திங்கள்கிழமை இளைஞா் ஒருவா் கோழியைத் திருடியதை பாா்த்து, அவரைப் பிடித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் சங்கரன்கோவில் என்.ஜி.ஒ. காலனியை சோ்ந்த சங்கா் மகன் ஹரிஹரசுதன்(21) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT