கரிவலம்வந்தநல்லூா் அருகே கோழிப்பண்ணையில் கோழியைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோமதிமுத்துபுரத்தைச் சோ்ந்த ஆபிரகாம் மகன் ஜேக்கப். இவா், அப்பகுதியில் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் அடிக்கடி கோழிகள் திருடுபோயினவாம். இதையடுத்து, பணியாளா்கள் மூலம் கண்காணித்ததில், திங்கள்கிழமை இளைஞா் ஒருவா் கோழியைத் திருடியதை பாா்த்து, அவரைப் பிடித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் சங்கரன்கோவில் என்.ஜி.ஒ. காலனியை சோ்ந்த சங்கா் மகன் ஹரிஹரசுதன்(21) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.