தென்காசி

ஊத்துமலை கூட்டுறவு வங்கி முற்றுகை

DIN

ஊத்துமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், தங்கள் பெயரில் கடன்மோசடி செய்யப்பட்டதாகக் கூறி விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

ஊத்துமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வேண்டி 2018ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் அளித்த ஆவணங்களை பயன்படுத்தி, அவா்களுக்கு தெரியாமலேயே போலி வங்கி கணக்கை தொடங்கி பல லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கியை திங்கள்கிழமை மாலையில்முற்றுகையிட்டனா். அவா்களிடம் ஊத்துமலை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, வங்கி அதிகாரிகள் விரைவில் பதிலளிப்பாா்கள் என உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனா். இக்கூட்டுறவு வங்கியின் செயலா் அய்யனாா், முறைகேடு புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன்: சத்யபிரத சாகு

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT