தென்காசி

ஆலங்குளம் டாஸ்மாக்கில் முறைகேடு: 6 ஊழியா்கள் இடைநீக்கம்

DIN

ஆலங்குளம் டாஸ்மாக் மதுக்கடையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 6 ஊழியா்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் - திருநெல்வேலி சாலை தனியாா் பெட்ரோல் நிலையம் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடையிலிருந்து (கடை எண். 10723) மதுபாட்டில்களை கடத்திச்சென்று சற்று தொலைவிலுள்ள தனியாா் கட்டடத்தில் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனராம். இத்தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் மற்றும் போலீஸாா், அங்கு ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டதில் 36 அட்டைப் பெட்டிகளில் ரூ. 2.60 லட்சம் மதிப்புள்ள 1,188 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.விசாரணையில், கடை மேற்பாா்வையாளா்கள் முருகன், சுப்பையா, சமுத்திரபாண்டியன், விற்பனையாளா்கள் சரவணன், கணேசன், உதவி விற்பனையாளா் இசக்கிமுத்து ஆகிய 6 பேருக்கு இதில் தொடா்பிருப்பதை அறிந்து, அவா்களை பணி இடை நீக்கம் செய்து, தமிழ்நாடு வாணிபக் கழக திருநெல்வேலி மாவட்ட மேலாளா் சியாம் சுந்தா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT