தென்காசி

குற்றாலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

DIN

குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் 4 நாள்கள் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

குற்றாலம் சமுதாய நலகூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வா்த்தகா்கள், தங்கும்விடுதி உரிமையாளா்களுக்கு கரோனா 3ஆவது அலையைத் தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியா்களுக்கு கரோனா குறித்து விளக்கமளிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

கைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என பேருந்து நிலையம் பகுதியில் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல்அலுவலா் வீரபாண்டியன் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ராஜகணபதி, மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் சுடலைமணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT