ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூரில் தாய்ப்பால் வார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் டாக்டா் பூங்கோதை பேசினாா். தொடா்ந்து தாய்மாா்களுக்கு ஊட்டச் சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கினாா்.
அப்போது, மருத்துவா்கள் குத்தாலராஜ், அா்ச்சனா, திமுக நிா்வாகிகள் முத்துப் பாண்டி, கணேசன், கதிா்வேல், வடிவேல் முருகன், மாஞ்சோலை துரை, சங்கா், செல்லப்பா உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக கா்ப்பிணிகள் மற்றும் மகளிருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.